Monday, 16 April 2012

இந்தியாவின் சிறப்பு

தெற்கே நாம்  மின் விசிறியின் கீழ் அமர்ந்திருப்போம் ஆனால் வடக்கே பனி குளிற் மழை பொழிந்து கொண்டிருக்கும்… இந்தியாவின் சூழ்நிலை ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு செல்ல ஓர் சீரான மாற்றம் இருக்கும். இந்த சீரான மாற்றம் மனிதர்களுக்கும் பொருந்தும்(உதாரணம் தலை முடி மாற்றம்). இத்தகைய மாறுபட்ட சூழ்நிலையில் நாம் எதனை வேண்டுமானாலும் விளைவிக்கலாம்.

நம் முன்னோர்களால் குடிசைத் தொழிலில் பிரித்து எடுத்த உலோகத்தில் கட்டப்பட்டதுதான் குதுப்மினார். இதன் சிறப்பு இன்றுவரை கண்டறியமுடியாத அளவிற்க்கு மிருதுவானதாகவும், துருப்பிடிக்காததாகவும் விளங்குகின்றது. இந்தகைய விந்தையான தொழிற் நுட்பம் இங்கிருந்திருக்கிறது.

ரைட் சகோதரர்கள் தங்கள் விமானக் கண்டுபிடிப்பினை அறிவிப்பதற்க்கு முன்பு அவர்கள் இந்தியாவிற்க்கு வந்து ஆறு மாத காலம் தங்கியிருந்திருந்திறார்கள் அதன் உள்நோக்கம் என்னவாக இருந்திருக்கும். நிச்சையமாக அவர்கள் கண்டு பிடிப்பிற்க்குத் தேவையானவை இந்தியாவில்  இருந்திருக்கிறது.

இந்தியா என்னும் ஒற்றுமை ஏற்ப்பட்ட பின். நாம் எந்த நாட்டிடமும் போருக்கு சென்றதில்லை அதனால் நமக்கு வீரம் இல்லை என்றல்ல(உலகை வென்ற அலெக் சான்டரும் வியந்த வீரம் நம்மிடம் இருந்திருக்கிறது). நம்மை எதிர்த்து போரிட்டு எவரும் வென்றதில்லை(சீனப் போர், காஷ்மீர் போர்) “வம்பு சண்டைக்கு போறதில்லை வந்த சண்டையை விட்டதில்லை” என்கிற மாதிரி.

நாசாவால் புதனுக்கு அனுப்பப்பட்ட ரோவர் என்னும் ரோபோடிக் எந்திரத்தின் மாதிரிவடிவம் YUPS TECH SOLUTION (India)  என்னும் இந்திய நிறுவனத்தால் வடிவமைக்கப் பட்டது.

http://www.youtube.com/watch?v=Li-a6iAgbaE

கூத்தப்பக்கம் என்னும் கிராமத்தில் ஒரு தொண்டு நிறுவனம் சில உயர் தொழில் நுட்ப முறையினை பயன்படுத்தி அங்குள்ள குடிசை வீடுகளை அகற்றுவது மற்றும் அவர்களது வாழ்க்கை தரத்தை உயர்த்தும் முயர்ச்சி நடந்து கொண்டிருக்கின்றது. அவர்களது உயரிய நோக்கம் அதனை சிறந்த மதிரி கிராமம் ஆக்குவது… இந்த முயற்ச்சியினை பாராட்டி பிரான்சினை சேர்ந்த ஒரு நிறுவனம் பரிசு அளித்துள்ளது. ஆனால் இந்தியாவில் இது கண்டு கொள்ளப்படவில்லை.


http://www.worldhabitatawards.org/winners-and-finalists/project-details.cfm?lang=00&theProjectID=296


Tell me, why is the media here so negative? Why are we in India so embarrassed to recognise our own strengths, our achievements? We are such a great nation. We have so many amazing success stories but we refuse to acknowledge them. Why?

      Abdul Kalam (President of India)

 

எல்லா வளமும் இங்கிருக்கிறது
    எடுத்தாலுவதில் குறையிருக்கிறது
விழித்துக்கொள் மானிடா
    இந்தியாவின் வெற்றியை
இமயத்திற்க்கு கொண்டு செல்ல..
.!

உள்ளுணர்வு

ஒரு நாள்  சாலையோரம் ஓர் உயிர் துடித்துக் கொண்டிருந்தது அந்த வழியே வந்த வலிமை படைத்த விளையாட்டு வீரன் விநாடிகள் விரைகின்றதென கண்டும் கானாது செல்கிறான்.

         அவ்வழி வந்த மருத்துவன் இலவச மருத்துவம் பார்க்க வேண்டி வருமோ என மருத்துவமனை வழியில் காத்து நின்றான் யாராவது கொண்டு வருவார்களா என்று.

         ஊர்களை நல்வழி படுத்தும் பாதிரியார் அருகில் சென்று தொட்டு கரையான சட்டையும் பார்த்து அய்யய்யோ என பதறி விலகினார்.

          உண்மையான உள்ளுணர்வு கொண்ட சிறுவன்.   அங்கிருந்தவர்களை அழைத்து அவரை மருத்துவமனையில் சேர்த்தான்.   அன்று அம்மனிதனின் மனைவி நீ தான் என் குல தெய்வமென கையெடுத்து கும்பிட்டாள் அச்சிறுவனை.

          உண்மையில் சேவை செய்ய பணமோ, படையோ அல்லது பொருள் பலமோ தேவை இல்லை.  உதவி செய்ய வேண்டும் என்ற உள்ளுணர்வு இருந்தால் போதும் அது எப்படியும் சாத்தியமாகும்.

        இந்த உண்மை உணர்விற்க்கு உண்மையான உதாரணமாய்,

மெஜர் சரவணன்,
அண்ணா விருது பெற்ற பிரியா மற்றும் முருகன்.

இவர்களின் உள்ளுணர்வுகள் உலகினில் எதாவது ஓர் ஊனுக்குள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும்.....

நம்பிக்கை

வாழ்வின் அடித்தலமாய் இந்த நம்பிக்கை...!

மலை ஏறுபவனுக்குத் தெரியாது தான் அந்த உச்சியை அடைவோமா என்று.

ஏற்கனவே தோற்றவர்கள் அவனுக்கு உதாரணங்கள். கயிறு கொண்டு ஏறினாலும் அவன் கொண்ட நம்பிக்கை தான் அவனது உண்மையான ஊன்றுகோல்...!

நம்பிக்கை இருந்தால் மட்டும் ஒன்றை தொடங்குங்கள் அது இல்லையேல்

நங்கூரம் இல்லா கப்பலை கடலுக்குள் இறக்குவதாகும்...!

 நம்பிக்கை வரும் வரை காத்திருப்பதில் தவறில்லை.தொடங்கும் பொழுது முழு மனதுடன் நம்பிக்கை என்னும் ஊன்று கோலுடன் தொடங்குங்கள்...!

நடந்தவைகள் எல்லாமே உணர்த்துகின்ற உதாரணங்கள் அது

உண்மையான வாழ்வு  அல்ல...!

நம்பிக்கையெனும் நரம்பில் தான் வழ்வின் உறவுகள் இணைக்கப்படுகின்றன. நம்பிக்கை என்னும் ஆனிவேரில் தான் வாழ்வு என்னும் பூக்கள் பூக்கின்றன...!

நம்பினால் தான் வெற்றி...!

நம்பினால் தான் உறவு...!

 நம்பினால் தான் வழ்க்கை...!

நம்புங்கள் வெற்றி வரும்...!

நம்புங்கள் வசந்தம் வரும்...!

நம்புங்கள் நல்வாழ்வு வரும்...!