Saturday, 4 August 2012

சந்தோசமான மன நிலை

      ஒரு உழவன் தனது வாழ்வின் துவக்கத்திலிருந்து கடினப்பட்டு வளர்கிறான். வளர்ந்தபின் தான் எத்தனை ஏக்கர் நிலம் சம்பாதிக்க வேண்டும் எவ்வளவு பணம் வைத்திருக்க வேண்டும் என தீர்மானித்தும் அதற்க்காக கடினப்பட்டு உழைத்தான் ஒரு நாள் தனது இலக்கினையும் அடைந்து விட்டான் அன்று அவன் வாழ்வினை திரும்ப பார்க்கையில் தனது வாழ்வில் பல சந்தோச தருணங்கள் ஒரு நிகழ்வாக மட்டும் முடிந்திருப்பதை உணர்கிறான்.

      வாழ்வில் வெற்றி மட்டும் தான் சந்தோசம் என்றால் இவர் ஏன் வருத்தப் படுகிறார். காரணம் இருக்கிறது மனித மனம் வல்லுனர்களால் இரண்டாக வகைப்படுத்தப்படுகிறது உள்மனம் மற்றும் வெளிமனம். நீக்கள் உள்மனத்திடம் உங்கள் இலக்கினை தெரிவித்தால் அது அதனை அடைவதற்க்கு மட்டுமே முயர்ச்சிக்கும் புற மனத்தை போன்று மனித உணர்வுக்களுக்கு கட்டுப் படாது.இந்த உள்மனத்தின் இலக்கினை அடைகின்ற முயர்ச்சியில் உங்கள் சந்தோசங்கள் மறைந்து போகலாம். (கையில் எண்ணையை வைத்துக் கொண்டு நராயணன் நாமம் உச்சரிக்க மறந்த நாரதனைப் போல)

      இது நடந்தால் மட்டும் தான் சந்தோசமாக இருப்பேன் என்ற மன நிலையை நாம் மாற்றிக் கொண்டால் போதும் நம் வாழ்வில் சந்தோசத்தை அதிகப்படுத்துவதற்க்கு. வெற்றி என்பது சந்தோசத்தினை ஊக்குவிக்கும் காரணிதானே தவிர ஆதாரம் அல்ல.

     சில நேரங்களில் நாம் கடினப்பட்டு உழைத்தாலும் சரியான வற்றை செய்தாலும் சமுதாயத்தின் வலிமையாலும் அது ஏற்படுத்தும் தடைகளாலும் தோற்க்க நேரிடலாம் உங்கள் சந்தோசமான மன நிலை அடுத்த முயர்ச்சிக்கான ஆற்றலை உங்களுக்குள் புகுத்திவிடும்.

     வாழ்வின் முனேற்றத்திற்க்கு இலக்கு நிர்ணயுங்கள் சந்தோசமான மன நிலையுடன்.  அது உங்கள் தடைகளை எடுத்தெரிகின்ற ஆற்றலை உங்களுக்கு அளித்துக்கொண்டேயிருக்கட்டும் உங்கள் இலக்கினை அடையும் வரை.

      எது நடந்தாலும் நான் சந்தோசமாக இருப்பேன் என்றும் (உங்களை உண்மையில் ஆதரிக்கின்ற உறவுகளை இழக்கின்ற தருணங்களைத் தவிர). உங்கள் சந்தோசத்தை எதனாலும் பரித்துக்கொள்ள முடியாது எனவும் நம்புங்கள். இந்த சந்தோசமென்னும் ஆற்றலை ஏற்றுக்கொண்டு எடுக்கின்ற முயர்ச்சியில் உங்கள் பெயரினை சரித்திரத்திலும் எழுதுங்கள்.

No comments:

Post a Comment