ஒரு சிறுவனின் தந்தை அதிகமாக குடிக்கின்ற பழக்கமுள்ளவர். ஒரு நாள் அளவுக்கு அதிகமாக குடித்தவர் தன் மனவியை வன்மையாக திட்டி அடிக்கிறார் அதனை பார்த்திருந்த சிறுவன் அழுது கொண்டு தன் தாயினை நாம் இறந்துவிடலாம் என அவள் கையினை பிடித்துக்கொண்டு அருகில் உள்ள கிணறினை நோக்கி விறைகிறான்.
கிணற்றின் அருகில் சென்றவன் உணர்ந்த மரண பயத்தில் தன் தாயினை கட்டி பிடித்துக்கொண்டு நாம் எங்கேயாவது போய் பிழைத்துக்கொள்ளலாம் என்கிறான்.
ஒரு கனம் யோசித்துப் பார்த்தால் உலகினை இரசிக்க வேண்டிய பருவத்தில் இறப்பினை நினைத்த வடுக்கள். இன்றும், அவர் கூறுகையில் அவரது கண்கள் கலங்கும்.
குடிப்பது கேடு என்பதை ஏற்றுக்கொள்ளாதவர்கள் உங்கள் உறவுகளையாவது காயப்படுத்தாமல் இருக்கலாம். அதிலும் உங்கள் எதிர்கால சந்ததியினருக்கு நல்ல விஷயங்களை விட்டு செல்லா விட்டாலும் நெருடுகின்ற வடுக்களை விட்டுச் செல்லாமல் இருக்கலாம்...
Saturday, 30 June 2012
Thursday, 14 June 2012
கவலையெனும் கரையான்
ஒருவர் தனது அலுவலகத்தில் இருந்து வீடு திரும்புகிறார். அவர் சென்று சேர வேண்டிய இடம் சுமார் 20 கிலோ மீட்டர் அந்த வாகனத்தை ஏற்ப்பாடு செய்தவர்கள் சரியாக திட்டமிடாததால் வேறு வேறு திசைகளிள் உள்ளவர்களை ஏற்றி விடுகிறார்கள்.
அந்த மனிதர் வாகனத்தில் ஏறி அமர்ந்த உடன். யார் யார் எங்கு எங்கு செல்கிறார்கள் என்பதை கேட்டவுடன் ஆரம்பித்தவர்தான்
நான் தான் அதிக தூரம் போக வேண்டும் என பொலம்ப ஆரம்பித்தவர் தனது அலுவலகத்திற்க்கு போன் செய்தார் அந்த ஓட்டுனர் உடன் வக்குவாதம் என பொலம்பி தீர்த்துக் கொண்டே வந்தார்.
உண்மையில் அன்று அவர் 12 மணிக்கு வீட்டுக்கு செல்ல
வேண்டியவர் குறைந்தது 2 மணிக்குத்தான் சென்றிருப்பர் அதற்க்கு உண்மையான காரணம் அவரது கவலை படுகின்ற குணாதிசயம்.
அவர் அந்த வாகன ஓட்டுனரிடம் நிலையை எடுத்துக்கூறி விட்டு இருந்தால் அவர் விரைவாக ஓட்டுவதற்க்கு முயர்ச்சி செய்து விரைவில் கொண்டு சேர்த்திருப்பார். ஆனால் அவரது கவலை இங்கே வாக்குவாதம் ஆகி ஓட்டுனர் வண்டியை செலுத்துவதில் கூட கவனமில்லாமல் விவாதிக்க ஆரம்பித்துவிட்டார்.
இது போலத்தான் கவலை நமது கனவினை அடைகின்ற வேகத்தை கரைக்கின்ற கரையான். விட்டொழியுங்கள் இதனை உங்களது இலக்கினை சரியான நேரத்தில் அடைய வேண்டுமானால். அர்னால்டு கிலாச்கவ்வின் வார்த்தைகளின் படி
வெற்றி என்பது
சரியானவற்றை சரியான நேரத்தில் சரியாக செய்வது
அந்த மனிதர் வாகனத்தில் ஏறி அமர்ந்த உடன். யார் யார் எங்கு எங்கு செல்கிறார்கள் என்பதை கேட்டவுடன் ஆரம்பித்தவர்தான்
நான் தான் அதிக தூரம் போக வேண்டும் என பொலம்ப ஆரம்பித்தவர் தனது அலுவலகத்திற்க்கு போன் செய்தார் அந்த ஓட்டுனர் உடன் வக்குவாதம் என பொலம்பி தீர்த்துக் கொண்டே வந்தார்.
உண்மையில் அன்று அவர் 12 மணிக்கு வீட்டுக்கு செல்ல
வேண்டியவர் குறைந்தது 2 மணிக்குத்தான் சென்றிருப்பர் அதற்க்கு உண்மையான காரணம் அவரது கவலை படுகின்ற குணாதிசயம்.
அவர் அந்த வாகன ஓட்டுனரிடம் நிலையை எடுத்துக்கூறி விட்டு இருந்தால் அவர் விரைவாக ஓட்டுவதற்க்கு முயர்ச்சி செய்து விரைவில் கொண்டு சேர்த்திருப்பார். ஆனால் அவரது கவலை இங்கே வாக்குவாதம் ஆகி ஓட்டுனர் வண்டியை செலுத்துவதில் கூட கவனமில்லாமல் விவாதிக்க ஆரம்பித்துவிட்டார்.
இது போலத்தான் கவலை நமது கனவினை அடைகின்ற வேகத்தை கரைக்கின்ற கரையான். விட்டொழியுங்கள் இதனை உங்களது இலக்கினை சரியான நேரத்தில் அடைய வேண்டுமானால். அர்னால்டு கிலாச்கவ்வின் வார்த்தைகளின் படி
வெற்றி என்பது
சரியானவற்றை சரியான நேரத்தில் சரியாக செய்வது
Subscribe to:
Posts (Atom)