Friday, 23 November 2012

வலியானாலும் வாழ்விற்கு வலுவூட்டும் வசந்தத்ததின் எதிரி

           ஒரு மனிதர் தனது . தோட்டத்தில் உள்ள கிணற்றில் அடிக்கடி இறங்கி அங்கு பொறுத்தப்பட்டிருக்கும் மோட்டரினை பழுது பார்த்தது விட்டு மேலே ஏறி வருகின்ற பழக்கமுள்ளவர்.

           பல வருடங்கள்  இது அடிக்கடி நடக்கின்ற நிகழ்வாக இருந்து வந்தது. அன்று அவருக்கு வயது நாற்ப்பது இருக்கும். எப்பொழுதும் போல  பழுதடைந்த மோட்டரினை பழுதுபார்க்க .இறங்கியவர் அந்த பனியினை முடித்தது  மேலே ஏறி வருவதற்க்கு எத்தனிக்கிற பொழுதில் அவரது வயது முதிர்வால் இரண்டு முறை தவறி கீழே விழுந்துவிடுகிறார்.

           இதனை அறிந்து கொண்ட இளைஞ்சர் கூட்டம் அங்கு சென்று அவருக்கு மேலே ஏறுவதற்க்கு பல விதமாக முயற்ச்சித்தார்கள் கயிறினில் மரத்தால் ஆன கோலினை அந்த கயிரினில் கட்டி ஏணி மாதிரி ஏறுவதற்க்கு உதவினார்கள்.

          ஆனால் அதனை பயன்படுத்தி மேலே வர நினைத்தவர் காலில் இருந்த ஈரமான மண்ணில் வழுக்கி கீழே விழுகிறார். இந்த முறை அவர் மூர்ச்சையானார். அங்கு இருந்த கூட்டம் அவரை வேறு விதமாக மேலே கொண்டுவருதர்க்கு தயாரானார்கள்.

         அதற்க்குள் கண் விழித்துக் கொண்டவர். இதனை கேட்டுவிட்டு அதெல்லாம் வேண்டாம் அந்த கோல்களை எடுத்து விட்டு வெறும் கயிரினை அனுப்பு என்கிறார். அதற்க்கு அங்குள்ள மக்கள் கூட்டம் வேண்டாம் என அது உங்கள் உயிருக்கு ஆபத்தாக அமைந்துவிடும் என கத்தினார்கள்.


         அவர் அமைதியாக கயிரினை போடுங்கள் என்றார். சில நிமிடங்கள் யோசித்தவர் கயிரினை பிடித்து மல மல என மேலே ஏறி வந்தார் எல்லோரும் அதிர்ந்து போயிருந்தார்கள். அவர் அங்குள்ள இளைஞ்சர்களிடம் சொன்னார்

         "சில நேரங்கலில் நாம் சில தோல்விகளைப் பார்த்தவுடன் நமது மனம் நம்மால் முடியாது என நினைக்கும் அதையே உலகமும் உரைக்கும் அதனை நம்பி உங்கள் தன்னம்பிக்கயை இழக்காதீர்கள். வாழ்வில் உங்கள் எதிர் திசையில் வலுவான காற்று வீசும்போது அதில் உங்கள் மனத்தினை உறமாக்கிக் கொள்ளுங்கள் உங்கள் எதிர் காலத்தின் வலிமையை சந்திக்கவும் (ம) சமுதாயம் தரும் இடையூருகளை எடுத்தெரியவும்."

         எனக்கு தெரியும் எத்தனை முறை இந்த ஏறி இறங்குகின்ற வலியினை நான் கடந்திருக்கிறேன் என்று அதில் வலுவடைந்த மனமும் அதன் அசைக்க முடியா நம்பிக்கைதான் இன்று என்னை வெளியே கொண்டு வந்தது.

        "தாயின் கருவரை உலகத்திலே மிகவும் பாதுகாப்பான இடம் என்பதற்க்காக ஆயுள் முழுவதும் அங்கேயே இருக்க முடியுமா இந்த மண்ணில் விழுந்து முட்டிகள் தேய்ந்து கிடைத்த வலிமையில்தானே நம் வாழ்வின் ஒவ்வொரு படியும் நகர்கிறது."

Friday, 9 November 2012

வார்த்தையின் வலிமை

           ஒரு நாள், இரயில் நிலையத்தில் நான் நின்று கொண்டிருக்கையில், புதிதாக திருமணம் ஆன கணவனும் மனைவியும் அருகில் நின்று கொண்டிருந்தனர். அது மாலை நேரம் சுரியன் தனது முகத்தை மெல்ல மறைத்துக் கொண்டிருந்தது.

         கடைத் தெரு விளக்குகள் மின்மினிப் பூச்சியின் ஒளிர்வினை காட்ட தொடங்கியிருந்தன. மக்கள் கூட்டம் எப்பொழுதும் போல இல்லாமல். சற்று குறைவாகவே காணப்பட்டது அப்பொழுதுதான் புது மன ஜோடி பேசிச் சிரித்ததுக் கொண்டு தங்கள்  உலகம் மறந்திருந்தனர்.

         எப்பொழுதும்  மிகக் குறைந்த வேகத்தில் வந்தது நிற்கும் தொடர்வண்டி அன்று மட்டும் சற்று வேகமாக வருவது போல் தோன்றியது.   அந்த இருவரும் அதனை கவனிக்கவில்லை மேலும் அவர்கள் நின்று கொண்டிருந்தது பாதுகாப்பு கோட்டிற்க்கு அப்பால்.

         மற்றவர்கள் அதனை கவனிக்காவிட்டாலும் அந்த சிறுவன் அதனை பார்த்து விட்டு   "அம்மா Train  வேகமாக வருகிறது ஒதுங்குங்கள் என கத்தினான்".  அதனை உணர்ந்து கொண்ட அந்தக் கணவர் தன் மனைவியின் கையினை பிடித்திழுத்து  பாதுகாப்பு எல்லைக்குள் கொண்டுவந்தார்.  அந்த இருவரின் முகத்திலும் அதிர்ச்சியிலும் பயத்திலும் வழிந்தோடிய வியர்வைத் துளிகள்.

       ஒரு அன்னை தனது சொந்த குழந்தையை பார்ப்பது போல் அந்த தாய் அந்த சிறுவன் முகத்தையே பார்த்து வருகிறாள் தான் இறங்கும் இடம் வரும் வரை.  இங்கு அந்த சிறுவனின் வார்த்தைகளின் வலிமை ஒரு உயிரினை (ம) அவர்களது சந்தோசத்தினைக் காப்பாற்றும் அளவிற்க்கு மகத்துவமாகியது  இங்கே.