Tuesday, 25 December 2012

இயல்பினை இழக்க வைக்கின்ற இலவசம்

            ஒரு நாள் நான் தொடர்வண்டியில் பயனித்திருக்கையில் தீபங்கள் எரிக்க உதவும் தீக்குச்சியினை தயாரிக்கின்ற வீதியில் இருந்து வந்த பெண்மணி அவர்கள் ஊரில் நிகழ்ந்த தீ வீபத்திணைப் பற்றி விவரித்ததுக் கொண்டு வந்தார்கள்.

           அப்பொழுது அவர்கள் கூரிய உண்மை. அந்த விபத்தில் இறந்த தொழிலாளர்களை விட அங்கு இருந்த வெடி பொருள்களை அள்ளிக் கொள்ள வந்துவர்கள்தான் அதிகம் என்று.

           ஒரு நிமிடம் எங்கள் மனம் பதறினாலும் அந்த அளவிற்க்கு நாம் இலவசமாக கிடைக்கின்ற பொருள்களை வாங்கிக் கொண்டு வாழுவதற்க்கு பழகிக்கொண்டிருக்கிறோம் என்பதும் உண்மை.

          அந்த பெண்மணி மேலும் கூறினார்.

               எனது துனைவர் சில நாட்களுக்கு முன்னால் விபத்தில் தனது கால்களை பரி கொடுத்தார் ஆனால் இன்று நான் சென்னையில் ஒரு ஆடை தயாரிக்கும் நிறுவநத்தில் பணிபுரிந்து எனது குடும்பத்தினை நடத்தி வருகிறேன் உண்மையில் அன்று அவ்விபத்தில் இறந்தவர்கள் பெரும்பாலும் இளைஞ்சர்கள்.

            அதிகம் படிக்காத பெண் நான் எனக்கு இருக்கும்  தன்னம்பிக்கை கூட அவர்களுக்கு இல்லாது போனதே எல்லாத்திற்க்கும் காரணம்  இந்த இலவசங்கள்தான்.

             அரிசி இலவசம், அடுப்பு இலவசம், T.V இலவசம் என இந்த இலவசப் பொருள்களை வாங்கி வைத்துக்  கொண்டு ஒரு வட்டத்துக்குள் வாழ்ந்து வாழ்வின் முன்னேற்றத்திற்க்கு உழைக்காத சோம்பேரிகாலாக மாறிக்கு கொண்டு இருக்கிறார்கள் அதுதான்  இத்தனை உயிரழப்புக்கு காரணம் என சொல்லி கலங்கினார்.

          இந்த இலவசங்கள் நம் முன்னேற்றத்திற்க்கு மறைமுகமான முட்டுக்கட்டையாக அதனை நம்பி வாழ்கின்ற மக்கள் சோம்பேரிகலாக
தங்கள் உண்மை இயல்பினை, தன்னம்பிக்கையினை, உழைத்து உண்ணுகின்ற மகத்துவத்தை மறந்து வருகின்றோம்.

         அந்த பெண்மணி கூறியது போல் அவருக்குள் இருக்கின்ற தன்னம்பிக்கை நமக்குள் எங்கு இருக்கிறது தேடுங்கள். இன்றும் சாலையோரம் 60 வயது ஆனாலும் சிறு தொழில் செய்து பிழைக்கின்ற முதியவர்கள் இருக்கையில் இந்த முதுகெலும்பு இல்லாத வாழ்க்கை நமக்கெதற்க்கு.

        எனது மகன் நல்ல வேளையிலிருந்தாலும் உழைக்காமல் உண்ணப் பிடிக்கவில்லை என கூறுகின்ற அவர்கள் வார்த்தை நமது வாழ்வாக வித்திடுங்கள். வண்ணமயமான வாழ்வினை வாழ்ந்து வனப்பான சூழலினை உருவாக்க.

No comments:

Post a Comment