Friday, 8 March 2013

பழையன கழிதலும் புதியன புகுதலும்


          வாழ்கின்ற வாழ்வு சந்தோசமான சரித்திரமாய் நமக்கும்,  நம்மை சுற்றியுள்ளவர்களுக்கும் உபயோகமானதாகவும் இருக்கட்டும்.
வாழ்வில் இயால்பாய்  இருங்கள்  உங்கள் குறைகளை பூசி மொழுவாமல் புன்னகையுடன் வருகிற நல்ல மாற்றங்களை ஏற்றுக் கொள்ளுங்கள் அது நிச்சயம் உங்களுக்கு நிறைவான மன நிம்மதியினைக் கொடுக்கும்.

           வாழ்வில் வதைபாடுகளையும், வருத்தத்தை, தோல்வியை மட்டும் கொடுக்கின்றவற்றிற்க்கு உங்கள் வாழ்வின் வெளி கதவுகளைக் காட்டுங்கள். வாழ்வு கற்பனைக் காவியமல்ல சோகமான முடிவில் மக்களின் இதயங்களை கொள்ளை கொள்வற்க்கு.
      
        உண்மையில் பார்த்தால் வெற்றி ஒரு வித போதை அது நாம் பலவீனம் ஆகிக் கொண்டிருப்பதையே உணரவிடாது.  அதற்க்காக வாழ்வின் வதைபாடுகளை நினைவில் கொள்ள வேண்டும் என சொல்ல  வரவில்லை அதிலிருந்து மீண்டு வந்த நிகழ்வுகளை நிஜமான ஆதாரமென கொள்ளுங்கள்.

        நாம் வெற்றியை மட்டும் எண்ணிக் கொண்டிருந்தால் தோல்வியை சந்திக்கிற பலம் நமக்கு இல்லாமல் போகலாம், ஏன் ஒரு சின்ன தோல்வி கூட நம் வாழ்வின் திசையினை மாற்றிவிடலாம்.

      வாழ்வில் தோல்வி கேவளம் என நினைத்து மூலையில் எடிசன் முடங்கியிருந்தால் உலகம் இன்றும் இருட்டில்தான் இருந்திருக்கும்.
ஆயிரம் முறை தோற்றிருந்தாலும் தனது அடி மன வலிமையில் ஆயிரம் கண்டுபிடிப்புகளை உலகிற்க்கு அளித்த வெற்றியாலனின் உதாரணமிருக்கையில், தோல்வியைக் கண்டு துவளாதீர்கள் அதனை தூக்கி எறிகின்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்

*****No defeat is final until you stop trying*****

      எனக்கு சில கருத்துகள் வந்தன நீங்கள் ஏன் தோல்வியினை பற்றி அதிகமாக அலசுகிறிர்கள் நீங்கள் உங்கள் வாழ்வில் அதிகம் தோல்வியினை சந்தித்தவறா?. என. நான் என்னை விற்பதற்க்காக எழுதவில்லை என்ற உண்மைக்கு காலம் பதில் சொல்லும். இங்கே வெற்றியின் சாரலை விட பூமியில் மூச்சி முட்டி வெளி வந்த விதைகளை விதைக்க விரும்புகிறேன் [இது தோல்வியல்ல அதிலிருந்து மீண்டு வந்த வெற்றி]

*****Success is how high you bounce when you hit the bottom*****

No comments:

Post a Comment