Saturday, 21 September 2013

கடந்தகால கஷ்டங்களை தாண்டிய நிம்மதி

      ஓர் குழந்தை பிறந்தது, கிருஷ்ண ஜெயந்தி என்னும் நன்னாளில் நாளில், ரோகிணி என்னும் நட்சத்திரத்தில்... அக் குழந்ததையின் மாமா அவர்கள் மிகவும் வசதி படைத்தவர் என்றாலும் தான் என்ற அகந்தையில் சிக்கிக் கொண்டிருந்தவர்.

     அப்பொழுது அவர்களது குடும்ப ஜோதிடர் கூறினாராம் இந்த குழந்தை நிம்மதியாய் இருக்க இருக்க உங்கள் நிம்மதி குறையும் என்று . அன்று முதல் அக் குழந்தையின் மாமா தன் சந்தோசத்தை விட,  அக் குழந்தை சந்தோசமாக இருக்கக் கூடாது என்பதில் மிகவும் கவனத்துடன் இருந்தாராம்.

     பள்ளி பருவம் தொடங்கி கல்லூரி பருவம் வரையில் அவனுக்கு பிடித்தவைகள் அவனுக்கு கிடைக்கக் கூடாது என்பதற்காக எல்லாவற்றையும் செய்தாராம்.   இந்த மாணவனது வாழ்க்கை ஒரு மாதிரியான விரத்தியில் சென்று கொண்டிருக்க அவன் பார்த்து இரசித்த ஒரு முதியவரின் நட்பு கிடைத்தது

     அவரிடம் இந்த மாணவன் கேட்டான் அய்யா எப்படி இந்த வயதிலும் இவ்வளவு சந்தோசமாக இருக்கிறீர்கள் என்று. அவர் சொன்னாராம் தம்பி ஒன்றை மட்டும் தெறிந்துக்கொள் வாழ்வில் சந்தோசத்திற்காக, நிம்மதிக்காக போராடாதீர்கள் அது நமக்கு கிடைக்காது

[Don’t force to get it,  Let it flow] 


அது நமது வாழ்வில் இயல்பாய் நிகழக் கூடியது.அன்று முதல் அவன் சந்தோசத்தை தேடி ஓடுவதில்லையாம் ஆனாலும் நிம்மதியான அவன் எண்ணத்தில் இச்சந்தோசம் புகுந்து கொண்டது. 

      அன்று முதல் அவன் மாமாவால் இவன் சந்தோசத்தை குறைக்க முடிவதில்லை. உண்மையில் நாம் ஒரு கனம் சிந்தித்து பார்த்தால் நமது வாழ்க்கை எப்படி தொடங்கியது என்பதில் இல்லை நாம் என்னவாக நடக்கிறோம் என்பதில் தான் இருக்கிறது.

It doesn’t matter how we started,  it matters what we choose to be…

No comments:

Post a Comment