Sunday, 21 April 2013

மனிதனின் முன்னேற்றப் பாதையும் நல்லுறவுகளின் அவசியமும்

           ஒரு மாணவன் தனது கல்லூரிப் பருவத்தில் NCC முகாமினில் பாங்கேற்கிறான் அதற்கு அவன் அவனுக்கு பழக்கமில்லா நீண்ட  துரம் செல்ல வேண்டியிருந்தது.  ஆனாலும் தான் பெருமிதமாக செய்கின்ற அப்பனிக்காக அங்கு சென்று விட்டு திரும்புகையில் சாலையோரம் குடித்துவிட்டு  ஓட்டி வந்த வாகனத்துக்குள் சிக்கிக் கொண்டான்.

          அங்கு இருந்தவர்கள் அவன் குறிப்பேட்டினை எடுத்‌தப் பார்க்க அவனது உறவுகள் வெகு தொலைவில் இருப்பது தெரிய வருகிறது தெய்வாதீனமாக அந்த ஊருக்கு அருகாமையில் உள்ள ஒரு நபரின் தொலை பேசி எண்ணினைப் பார்த்து விட்டு அவருக்கு போன் செய்து சொன்னதும்.

        அடுத்த 30 மணித்துளிகளுக்குள் அவர் அவனை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு தனது இரத்தத்தையும் கொடுத்து அவனது விட்டிற்க்கு போன் செய்து கொண்டிருந்தார் அங்கிருந்தவர்கள் நீங்கள் யார் இவருக்கு என்றார் எனது பள்ளி  பருவத்து நண்பன் என்றார்.

         உண்மையில் ஒருவனின் முன்னேற்றத்திற்கும் சந்தோசத்திற்கும்  உண்மையான தூண்டுதலாய் இருப்பது அவனது நட்பும் உறவுளும்தான். அவர்கள் தகரம் தகரம் என கூறினால் தங்கம் கூட தகரமாகிவிடும் என்பார்கள் அது போலில்லாது உங்களை சூழ்ந்து நிற்கிற நட்பும், உறவுகளும் உங்களை ஆதரிப்பதாக இருக்கட்டும். அது இல்லாத நிலையில்  அதனை தூரத்தில் வைக்க கூட தயங்காதிர்கள்.

          ஒவ்வொரு வெற்றியாலனுக்குப் பின்னும் அவனை ஆதரித்த குழுமம் அலட்டிக் கொள்ளாமல் அமைதியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறது  என்பது மறுக்க முடியாத ஒன்று.  உங்களிடம் உண்மையாய் இருக்கின்ற நட்புக்கும் உறவுகளுக்கும் உண்மையாய் இருங்கள் அது உங்களையும் உங்கள் சூழலையும் சந்தோசமாக்குவதுடன் அதுவே உங்களது வெற்றிப் பாதைக்கும் வழி வகுக்கும்.

Friday, 19 April 2013

விதைப்பதும் விளைவதும்

           நன்றாக வசதி படைத்தவர் ஒருவர் தன் தாய் தந்தையுடன் வசித்து வந்தார் நல்ல உழைப்பாளி ஆனால் தனது பெற்றோரை பாதுகாப்பதில் (ம) கவனித்துக் கொள்வதில் ஒரு சிறு தடுமாற்றம் இரக்கமும் சகிப்பு தன்மை இல்லாமை அவர்களை தனி அறையில் வாழ வைத்து வந்தார்.

          அவர்களுக்கென தனி அறை தனித்த பொருட்கள் அவர்கள் உபயோகப் படுத்தும் பொருட்களை கூட அவர் தொட மாட்டார் அவருடைய மனைவி இந்த காலத்து பெண்மனி மேலும் தன் சந்தோசத்தை மட்டும் பெரிதாக நினைத்ததுக் கொண்டு வாழ்பவள்.

         மகனின் மூலம் இவ்வாறு நடத்தப்பட்ட அவர்கள் பெறும் மன உழைச்சலுக்கு ஆலாகி ஒரு நாளில் இறந்து போயினர். அவர்களது இறுதி சடங்கு முடிந்தபின் அந்த அறையில் உள்ள பொருட்களையெல்லாம் எடுத்த எறிந்துவிட்டு அந்த பாத்திரங்களையெல்லாம் வெளியேற்றிக் கொண்டிருந்தார்.

         அதனைப் பார்த்துவிட்டு அந்த சிறுவன் ஓடிவந்து அப்பா அப்பா அவைகளை  ஏன் தூக்கி எறிகிறீர்கள். அவைகளையெல்லாம் அகற்றிவிட்டால் நான் உங்களை எங்கு தங்கவைப்பது எதில் சோறு போடுவது என கேட்டான்?

        விளையாட்டு பிள்ளை ஆனால் எதார்த்தமான கேள்வி "நாம் எதனை கொண்டு அடுத்தவர்களை அளக்கிறோமே அதனைக் கொண்டே நாம் அளக்கப்படுவோம்"  அந்த தந்தை  பேச முடியாமல் மலைத்துப் போய் அவ்விடத்திலே உட்கார்ந்து விட்டார்.

       மனிதம் நேர்மறை (ம) எதிர்மறை உணர்வகளோடு படைக்கப் பட்டிருக்கிறது.  ஏன் உலகம் போற்றும் தலைவர்கள் கூட சில எதிர்மறையான உணர்வுகளுடன் வாழ்ந்திருக்கிறார் ஆனால் அவைகள் குறுகிய வட்டத்துக்குள் வைக்கப்பட்டு  நேர்மாறையான உணர்வுகள் மட்டும் பரப்பப்பட்டன அதுவே அவர்களின் வெற்றிக்கும் தூண்டுதலாய் இருந்திருக்கிறது.

          ஒரு சிறு எதிர்மறையான உணர்வுக்கு உதாரணமாய் கோபம் இது நம் உள்ளத்தில் நினைத்த ஒன்று நிகழாத ஆதங்கத்தின் வெளிப்பாடு.  அது வந்தவுடன் அதற்க்கு காரணமானவர்கள் மீது கல்வீச காத்திருக்கிற காலம். அதற்க்காக சிதறடிக்கப்படுகின்ற நம் கவனச் சிதறல்கள் அதனால் நாம் இழந்துவிடுகின்ற நிகழ்கால நிமிடங்கள் என அடுக்கி  கொண்டே போகலாம்.

         ஆனால் நேர்மறையான நம் தாயின் அன்பு;  உலகில் எத்தனை உறவுகள் வந்தாலும் சரி செய்ய இயலாது என நினைக்க வைக்கிற அவளது அன்பும் அக்கறையும்   இப்படி எத்தனை எத்தனையோ நேர்மறை  (ம) எதிர் மறையான உணர்வுகள் நம்மில்.

        எது நமக்கு வெற்றியையும் நல்ல சந்தோசமான சூழ்நிலையையும் கொடுக்கும் எதனை இங்கு விதையாக விட்டுச் செல்லப் போகிறோம்  அதனால் என்ன விளையப் போகிறது என்ற விடை தெறியா வினாவிற்க்கு விடை தேடுகின்ற தாகமாய் விரைகிற காலம்.

Saturday, 13 April 2013

நல் வாழ்விற்க்கான தூண்டுதல்

          ஒருஇரயில்பயணத்தின் போது ஒருவர் தனது நண்பரிடம் தனது மகன் Diploma படிப்பதாக கூறினார் அதற்க்கு அவர் நல்ல படிப்புதான் ஆனால் படித்து முடித்து விட்டு வேலைக்கு சென்றபின் தொலை தூர கல்வியில்  B.E படிக்கச் சொல்லுங்கள் என்கிறார். 

         அடுத்த நிமிடம் அது சரிதானா தம்பி என என்னைக் கேட்க நான் ஆமாம் என சொல்வதற்க்குள் அந்த தந்தை சொன்னார் "இதுவே என் தகுதிக்கு    அப்பாற்பட்டது அவன் வேலைக்கு சென்று படிப்பதாக இருந்தால் படிக்கட்டும் இதுவே வங்கியில் கடன் வாங்கிதான் படிக்க வைக்கிறேன்.

          அதுவும் எத்தனையோ வங்கியில் சுய நலன்களுக்காக கடன் கொடுக்க மறுத்தாலும் தனது வாங்கியின் மேனேஜர் பெயரினைக் கூறி அந்த புண்ணியவான் நல்லா இருக்கணும் அவர் பசங்கலெல்லாம் நல்லா இருக்கட்டும் எங்கள் வாழ்வில் விளக்கேற்றிய பெரிய மனிதன்"
என கூறிவிட்டு கலங்க ஆரம்பித்து விட்டார்.

          உண்மையில் உலகத்தில் நல்வழியில் நடப்பது கொஞ்சம் கஷ்டமான விஷயமாக இருந்தாலும் அதற்க்கு சிறு சிறு ஆசைகளை இழக்க வேண்டியிருந்தாலும் இந்த மாதிரியான வாழ்த்துகள் நிச்சயமாக அவருக்கு மன நிம்மதியையும் சந்தோசத்தையும் கொடுக்கும். 

         தீமைகள் அதிகமிருக்குமிடத்து நன்மை வாழ்வது கஷ்டம்தான் என்றாலும் நன்மை இருக்குமிடத்து தீமைகள் இருப்பதும் கஷ்டம்தான்.  தீமைகள் உங்களை சூழ்ந்து கொண்டால் இதனை நினைவில் கொள்ளுங்கள்.

        ஒரு நாள் புத்தர் நடந்து சென்ற பாதையில் அவரை பிடிக்காதவர் நின்று கொண்டு சரா மாறியாக திட்‌டினாராம் புத்தர் சிரித்ததுவிட்டு ஆங்கிருந்து விலகி சென்றாராம் அதனைப் பற்றி மக்கள் அவரிடம் கேட்க புத்தர் சொன்னாராம்.

        உங்களுக்கு யாராவது அன்பளிப்பு கொடுத்தால் அது பிடித்தால் தானே ஏற்றுக் கொள்வீர்கள் அது போலத்தான் அவன் கொடுத்த அன்பளிப்பு எனக்கு ஒவ்வாதது மேலும் அது எனக்கு பிடிக்கவில்லை அதனால் அது என்னுடையதில்லை  என கூறிவிட்டு சென்றாராம். 

        நம்மால் எல்லாருக்கும் நல்லவராகவோ தீயவராகவோ இருக்க முடியாது அதுதான் எதார்த்தமும் கூட என்பதினை மனதில் கொண்டு நமக்கு ஒத்துபோகிற. பிடித்தவற்றை. தேவையானவற்றை ஏற்றுக்கொண்டும் தேவையற்ற, ஒவ்வாத, பிடிக்காதவற்றை எனதில்லை என்ற உணர்வுடன் நல்லனவற்றை நோக்கி பயனிப்போம்.  விடிகிற காலை நம் சந்தோசத்தின் விடியலாய் இருக்க.