Sunday, 21 April 2013

மனிதனின் முன்னேற்றப் பாதையும் நல்லுறவுகளின் அவசியமும்

           ஒரு மாணவன் தனது கல்லூரிப் பருவத்தில் NCC முகாமினில் பாங்கேற்கிறான் அதற்கு அவன் அவனுக்கு பழக்கமில்லா நீண்ட  துரம் செல்ல வேண்டியிருந்தது.  ஆனாலும் தான் பெருமிதமாக செய்கின்ற அப்பனிக்காக அங்கு சென்று விட்டு திரும்புகையில் சாலையோரம் குடித்துவிட்டு  ஓட்டி வந்த வாகனத்துக்குள் சிக்கிக் கொண்டான்.

          அங்கு இருந்தவர்கள் அவன் குறிப்பேட்டினை எடுத்‌தப் பார்க்க அவனது உறவுகள் வெகு தொலைவில் இருப்பது தெரிய வருகிறது தெய்வாதீனமாக அந்த ஊருக்கு அருகாமையில் உள்ள ஒரு நபரின் தொலை பேசி எண்ணினைப் பார்த்து விட்டு அவருக்கு போன் செய்து சொன்னதும்.

        அடுத்த 30 மணித்துளிகளுக்குள் அவர் அவனை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு தனது இரத்தத்தையும் கொடுத்து அவனது விட்டிற்க்கு போன் செய்து கொண்டிருந்தார் அங்கிருந்தவர்கள் நீங்கள் யார் இவருக்கு என்றார் எனது பள்ளி  பருவத்து நண்பன் என்றார்.

         உண்மையில் ஒருவனின் முன்னேற்றத்திற்கும் சந்தோசத்திற்கும்  உண்மையான தூண்டுதலாய் இருப்பது அவனது நட்பும் உறவுளும்தான். அவர்கள் தகரம் தகரம் என கூறினால் தங்கம் கூட தகரமாகிவிடும் என்பார்கள் அது போலில்லாது உங்களை சூழ்ந்து நிற்கிற நட்பும், உறவுகளும் உங்களை ஆதரிப்பதாக இருக்கட்டும். அது இல்லாத நிலையில்  அதனை தூரத்தில் வைக்க கூட தயங்காதிர்கள்.

          ஒவ்வொரு வெற்றியாலனுக்குப் பின்னும் அவனை ஆதரித்த குழுமம் அலட்டிக் கொள்ளாமல் அமைதியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறது  என்பது மறுக்க முடியாத ஒன்று.  உங்களிடம் உண்மையாய் இருக்கின்ற நட்புக்கும் உறவுகளுக்கும் உண்மையாய் இருங்கள் அது உங்களையும் உங்கள் சூழலையும் சந்தோசமாக்குவதுடன் அதுவே உங்களது வெற்றிப் பாதைக்கும் வழி வகுக்கும்.

No comments:

Post a Comment