Wednesday, 9 April 2014

தேவையற்றவை தேவையற்றவையே அது அத்தியாவசியம் ஆகும் வரை

          ஒரு நாள் ஒரு வயதான முதியவரும் நான்கு இளைஞர்களும் ஒரே இரயில் பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தனர். முதலில் அவர்கள்; அவர்கள் எடுத்துவந்த அலை பேசியில் பேசுவது, பாடல்கள் கேட்பது என்றுதான் அப்பயணம் தொடங்கியது
              
        அந்த பயணம் தொடங்கிய ஓர் இரு மணி நேரத்திற்குள் அனைவரும் அவர்கள் கொண்டுவந்த தொழில் நுட்ப கருவிகளில் சலித்து
போயிருந்தனர். அப்பொழுது அங்கிருந்த ஒருவரை பார்த்து நீ என்னப்பா செய்கிறாய் என கேட்டார். அதற்கு அவர் நான் இராணுவத்தில்தான்
வேலை செய்கிறேன் என்றார்.

        என்ன தம்பி இவ்வளவு சலிப்பா சொல்லுற, பின்ன என்னங்கையா நாங்க எங்கள் பிள்ளை, மனைவி எல்லாத்ததையும் விட்டுட்டு
காடு, மலை, பனின்னு பார்க்காம உழைக்கிறோம் யாருங்கையா எங்களையெல்லாம் மதிக்கிறது.

        மரியாதையெல்லாம் உள்ளுரிலே இருந்துகிட்டு தவறே செய்து சம்பாரித்தாலும் காருல போரவனுக்குதான மரியாதை, ஏதோ அந்த குடியரசு தினம், சுதந்திர தினம் என இரண்டு நாட்களில் மட்டும்தான் எங்களைப்பற்றி செய்தித்தாளில் வரும், எங்காவது எங்களில் நாலு பேர் செத்தா செய்தியா போடுவாங்க.

        நாங்கள் என்ன தியாகம் செய்தாலும் எங்கள் உயிரையே காசுக்கு விக்குறாங்க நம்மை ஆட்சி செய்பவர்கள். எங்களுக்கு கிடைக்கிற சம்பளத்தில் எங்கக பிள்ளைகளை நல்ல இடத்தில படிக்க வைக்க கூட முடியல, என அடுக்கி கொண்டே இருந்தார். அந்த பெரியவர் சரி தம்பி என்னதான் உன் ஆசை..!

      குடும்பத்தோட இருக்கனும், நல்ல சம்பாதிக்கனும், கார் வங்கனும், வீடு கட்டனும், எனுக்கு கல்யாணம் ஆயிடுச்சு இரண்டு குழந்தையும் இருக்கு அய்யா, அப்புறம் ஏதாவது நாலு பேருக்கு நல்லது பண்ணி நாலு பேருக்கு உதவியாக இருக்கனுமையா.

        அதற்கு அந்த பெரியவர் குறுக்கிட்டு அதை தான் நீ இப்ப செய்துக்கிட்டு இருக்கிறப்பா என்றார், அப்புறம் அந்த பெரியவர், நமக்கு சந்தோசம் தரும் உறவுகளையும்/உடைமைகளையும் நாம் நிர்ணயிக்கவும், கட்டுப்படுத்தவும் முடியாது.  அது நம்மை கேட்டுவிட்டு நம்முடன் இருப்பதில்லை,

        நாம் அடைய நினைக்கும் உடைமைகளும்/உறவுகளும் நமக்கு நீண்ட சந்தோசத்தை கொடுக்குமா அது நமக்கு தெரியாது.   இப்படி தெரியாத விசயங்களில் நமது வாழ்க்கையின் நிமிடங்களை வீணடிப்பதற்கு பதிலாக, உங்களுக்கு சந்தோசம் தரும் பணியினை முழு மனதுடன் செய்து கொண்டே இருங்கள் அது உங்கள் வாழ்வின் உயர்வுக்கு வழி வகுக்கும் என்றார்.

       அந்த இளைஞ்சர்கள் வந்துட்டாருடா வாத்தியாரு என தங்களுக்குள் கிண்டல் பேசிக்கொண்டு, நாங்கள் இராணுவத்தில் இருந்த வருகையில் மதுபானம் வாங்கி வந்திருக்கிறோம் உங்களுக்கு வேண்டுமா என்றனர்.

      அதற்கு அவர் இதனை குடித்தால் எல்லாத்தையும் மறப்போம் என்பார்கள் ஆனால் அது அவசியமல்ல வாழ்வில் நடப்பனவற்றை காணத்தான் படைக்கப் பட்டிருக்கிறேன். அங்கு சலசலப்பு அதிகரித்தது,

      இப்படி அவர்கள் கேள்விகளை அடிக்கிக் கொண்டிருக்க, இறுதியாக வெளியில ஓட்டல்ல கூட சாப்பிட மாட்டிங்களா என்றார்கள், இல்லை சாப்பிட மாட்டேன். அங்கு சாப்பாடு ருசியாயிருக்கும் ஆனா நான் நல்லா இருக்கனும் இதால எனக்கு எதுவும் ஆயிட கூடாது என்கிற அக்கறை இருக்காது. வெளியில சாப்பிட்டா அது பழங்கள்தான்.

       இப்படி வாழ்க்கையில் எவ்வளவோ விசயங்கள, அவசியமில்லாமலே நாம் நமது சுமைகளை கூட்டி கொண்டே இருக்கிறோம் அது அத்தியாவசியம் இல்லை என்றாலும்.

       நான் அஞ்சலகத்தில் பணி புரியும் சாதாரண அரசு தொழிலாளிதான்
எனது இரண்டு மகன்களில் ஒருவன் அமெரிக்காவிலும் மற்றொருவன் ஆஸ்திரேலியாவிலும் இருக்கிறான். நான் செய்ததெல்லாம் என்னுடைய பணியினை விரும்பியதுதான்.

      என் சம்பளம் என்னுடைய குடும்பதினை நடத்த கஷ்டமாகத்தான் இருந்தது நான் அடுத்தவர்களை பார்த்து அவர்களின் விருப்பதினை பின்பற்ற நினைத்த வரை. நான் என் பனியினை வெறுத்ததில்லை அதுதான் எனக்கு இன்றைக்கு இப்படி ஒரு சந்தோசமான வாழ்வினை கொடுத்திருக்கிறது என நம்புகிறேன் என்றார்.

       அந்த இளைஞர்கள் மன குழப்பத்துடன் தங்கள் ஊரில் இறங்கி நடந்தனர். அவர்கள் வாழ்வில் நல்ல மாற்றம் ஏற்பட்டிருக்குமென நம்புகிறேன்...

Saturday, 1 March 2014

முன்னேற்றப் பாதையை நோக்கி

            படகோட்டி ஒருவரிடம் ஒரு கேள்வி எழுப்பப்பட்டது காற்று பலமாக வீசும் போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும் என்று அதற்க்கு அவர்.

     காற்று பலமாக வீசும் போது அதன் பின்னால் நிச்சயம் ஓர் அமைதி கிடைக்கும் என்ற ஆழமான நம்பிக்கையின் தெளிவில் வருகிற இடையூருகளை எதிர் கொள்வோம் 

     அந்த முன்னேற்றத்தை நோக்கிய பாதையில் சிறு சிறு நிகழ்வுகலான வெற்றி தோல்வி எல்லாம் எங்கள் நினைவுகளில் நிற்காது அந்த அமைதி கிடைக்கின்ற நொடிப்பொழுதினை நினைத்ததுக் கொண்டே எங்கள் உழைப்பு முன்னோக்கி செல்லும் என்றார்.


          வாழ்வில் கிடைக்கின்ற வெற்றி தோல்விகளை விட முன்னேற்றப் பாதையில் பயணிக்க வேண்டும் என்ற எண்ணத்தை உங்கள் உள்மனதில் புகுத்துங்கள். அதுவே கிடைத்த வெற்றிக்காக பிறரை பழிப்பதையும், கிடைத்த தோல்விக்காக கூனி குறுகிக் கொள்ளவதையும் உங்களிடமிருந்து இருந்து தொலைந்து  போகச் செய்யும்,

        எது நடந்தாலும்,  எந்த ஒரு தடையாக இருந்தாலும் அதற்க்கு ஓர் வரையறை இருக்கிறது அதனை தாண்டும் வரைதான் நம் உழைப்பு அதிகம் தேவைப்படும்.  எந்த ஒரு தடையாளும் உங்களை நிரந்தரமாக முடக்க  முடியாது என்ற எண்ணம் உங்களுக்கு முன்னோக்கி செல்ல முதன்மை எண்ணத்தை கொடுக்கும்.

       இது தொடர்கையில், நீங்கள் பயணித்த பாதையினை பதிவுகளே உங்களுக்கு ஆசைக்க முடியாத நம்பிக்கையை கொடுக்கும், உங்கள் கனவுகளை எட்டும் வரை.

வெற்றியோ தோல்வியோ
         நிரந்தரமில்லை
வேசமிட்டுக் கொள்ளா
     பூமியின் சமநிலை - இங்கு
நிலைக்கும் வரை...!

Saturday, 16 November 2013

கட்டுப்பாடுகளை தாண்டிய கண்ணியம்

       சிறுவன் ஒருவனின் தந்தை மிகவும் மரியாதைக்குறியவர். தன்னை போலவே தனது மகனும் இருக்க வேண்டும் என்ற ஆவல் அவருக்கு சற்று அதிகமே இருந்திருந்ததது. நிறைய கட்டுப்பாடுகள் அவன் சுதந்திரம் அதற்குள் சிக்கிக் கொண்டது. அவன் செய்யும் சிறு  தவறுகளும் அவனை மிகப் பெரிய தண்டனைக்கு உள்ளாக்கியிருந்தது.

     அவன் நாட்கள் நகர்ந்தன நரகமென. கல்லூரிப் பருவமும் வந்தது தாய் தந்தையினை பிறிந்து இருக்க வேண்டிய நிர்பந்தம். அது முதலில் அவனை வாட்டினாலும் அவன் சுதந்திரம் அவனுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தகர்த்திக் கொள்ள வழி வகுத்தது.

     தன் பிள்ளை நன்கு படித்து தன்னை போல் நல்ல மரியாதைக்குரியாவனாக வாழ்வான் அதற்க்கான விதையினை  விதைத்துவிட்ட நிம்மதியில்,  அவன் தந்தை வாழ்ந்து கொண்டிருக்க. அழைப்பு வந்தது தன் மகனின் உடல்
எடுத்துச் செல்ல.

     இத்தந்தைக்கு ஒன்றும் விளங்கவில்லை பிள்ளையை பறிகொடுத்த பதற்றத்தில் அங்கு உள்ளவரிடம் சென்று கேட்க அவனுக்கு நிறைய தீய பழக்கம் இருந்ததையும் ஏதோ ஒரு அற்பமான தோல்விக்கு அவன் உயிர் பிரிந்ததாகவும் தெரியவந்தது.

     அன்று முதல் அவர்  சிறுவர்களை அடித்தால் நடுங்க வைக்காதே அன்பினில் வாழ கற்றுக் கொடு. கட்டுப்பாடுகளை அதிகம் விதைக்காதே கண்ணியத்துடன் வாழக் கற்றுக் கொடு என்பாராம் அன்று முதல் இவ்வுலகம் அவரை பிள்ளையை பறிகொடுத்த பைத்தியம் என அழைக்க ஆரம்பித்துவிட்டது.

     உலகில் எல்லோரின் விருப்பங்களை நிறைவேற்ற நினைப்பவன் வெற்றியாலனாய் இருக்க முடியாது என்பார்கள்.   

    கட்டுப்பாடுகள் அவசியம் தான் அதற்காக அதனை மட்டும் விதிக்கத் தெரிந்த அது வளர்ச்சியினை தடுக்கும் என்ற எண்ணமும்,  சிறு தவறானாலும் ஒருவரை ஒருவர் பழித்துக் கொள்ளும் எதிர்மறையான சூழலில் மூச்சி முட்டி இறப்பதற்குள், அதனை விடுத்து விலகிச் சென்று கண்ணியத்துடன் வாழக் கற்றுக் கொள்ளுங்கள். அது உங்களை சுமந்தவர்களின் மன நிம்மதியினை நிச்சயம் குறைக்காது.

     மனிதம் விழைவது இங்கே விழுகையில் வலுவுட்டும் கரங்களைத்தான் விழுந்தபின் துளைக்கின்ற வல்லுருக்களை அல்ல.  நீங்கள் வாழுகின்ற சூழல் உங்கள் சுதந்திரத்தை பறிக்காத, விருப்பங்களுடன் ஒத்துப் போகின்ற, வளர்ச்சியினை தடுக்காததாக இருக்கட்டும் அதே சமயம் உங்கள் செயல்பாடுகள் அவர்களுக்கு இதே நிலைமையினை கொடுப்பதாகவும்  இருக்கட்டும்.  

Saturday, 21 September 2013

கடந்தகால கஷ்டங்களை தாண்டிய நிம்மதி

      ஓர் குழந்தை பிறந்தது, கிருஷ்ண ஜெயந்தி என்னும் நன்னாளில் நாளில், ரோகிணி என்னும் நட்சத்திரத்தில்... அக் குழந்ததையின் மாமா அவர்கள் மிகவும் வசதி படைத்தவர் என்றாலும் தான் என்ற அகந்தையில் சிக்கிக் கொண்டிருந்தவர்.

     அப்பொழுது அவர்களது குடும்ப ஜோதிடர் கூறினாராம் இந்த குழந்தை நிம்மதியாய் இருக்க இருக்க உங்கள் நிம்மதி குறையும் என்று . அன்று முதல் அக் குழந்தையின் மாமா தன் சந்தோசத்தை விட,  அக் குழந்தை சந்தோசமாக இருக்கக் கூடாது என்பதில் மிகவும் கவனத்துடன் இருந்தாராம்.

     பள்ளி பருவம் தொடங்கி கல்லூரி பருவம் வரையில் அவனுக்கு பிடித்தவைகள் அவனுக்கு கிடைக்கக் கூடாது என்பதற்காக எல்லாவற்றையும் செய்தாராம்.   இந்த மாணவனது வாழ்க்கை ஒரு மாதிரியான விரத்தியில் சென்று கொண்டிருக்க அவன் பார்த்து இரசித்த ஒரு முதியவரின் நட்பு கிடைத்தது

     அவரிடம் இந்த மாணவன் கேட்டான் அய்யா எப்படி இந்த வயதிலும் இவ்வளவு சந்தோசமாக இருக்கிறீர்கள் என்று. அவர் சொன்னாராம் தம்பி ஒன்றை மட்டும் தெறிந்துக்கொள் வாழ்வில் சந்தோசத்திற்காக, நிம்மதிக்காக போராடாதீர்கள் அது நமக்கு கிடைக்காது

[Don’t force to get it,  Let it flow] 


அது நமது வாழ்வில் இயல்பாய் நிகழக் கூடியது.அன்று முதல் அவன் சந்தோசத்தை தேடி ஓடுவதில்லையாம் ஆனாலும் நிம்மதியான அவன் எண்ணத்தில் இச்சந்தோசம் புகுந்து கொண்டது. 

      அன்று முதல் அவன் மாமாவால் இவன் சந்தோசத்தை குறைக்க முடிவதில்லை. உண்மையில் நாம் ஒரு கனம் சிந்தித்து பார்த்தால் நமது வாழ்க்கை எப்படி தொடங்கியது என்பதில் இல்லை நாம் என்னவாக நடக்கிறோம் என்பதில் தான் இருக்கிறது.

It doesn’t matter how we started,  it matters what we choose to be…

Saturday, 14 September 2013

நட்பின் நரம்புகளும் சந்தோசத்தின் உறைவிடமும்

         ஒரு நாள் எனது நண்பர் ஒருவர், தனது நண்பருடன் பொருட்கள் வாங்குவதற்க்கு சென்றிருந்தார். அங்கு சென்ற எனது நண்பர் எனக்கு அது வேண்டும் இது வேண்டும் என எடுத்‌துக் கொண்டிருக்க அவரது நண்பர் ஓர் இரு பொருளை எடுத்துவிட்டு நான் முடித்துவிட்டேன் என கூறினாராம்.

       அதற்கு எனது நண்பர் என்னடா காசு இல்லையா வேண்டியதை எடுத்துக்கோ அப்புறமா திருப்பி கொடு, நான் பணம் கொடுக்கிறேன் என்றாராம் அதற்கு மற்றொருவர் எனக்கு தேவையில்லை. நீ உனக்கு தேவையானவற்றை எடுத்‌துக் கொண்டு வா என பொன் சிரிப்புடன் கூறிவிட்டு அங்கிருக்கும் பொருட்களின் தரம் மற்றும் விலையினை விசாரிக்க ஆரம்பித்தாராம்.

       இந்த மற்றொறு நண்பர் தனக்கு தேவையான இன்னும் சிலவற்றை எடுத்‌துக் கொண்டு போகலாம் என்றாராம்.   அப்பொழுது அவர் நண்பர் இவரது அருகில் வந்து தனது பர்சில் இருந்த பணத்தினை எடுத்துக் கொடுத்தாராம், இது நான் முன்னமே உன்னிடம் வாங்கியதுதான்.

       அப்பொழுது அவர் சொன்னாராம் நீ நெனைக்கிற மாதிரி எனது சந்தோசம் இந்த பர்சுக்குள்ளேயோ அல்லது அந்த பொருளோடோ ஓட்டியிருக்கவில்லை நண்பா!.

        அது நான் வாழ்கின்ற வாழ்வில் நான் பழகுகின்ற உன் நட்பில் இருக்கிறது, வருமானம் குறைவெனினும் எனது வருவாயில் வாழுகின்ற துணிவில் இருக்கிறது,

       இறைவன் எனக்கு உன்னை போன்ற நல்ல மனம் படைத்த நண்பர்களை கொடுத்திதிருக்கிறார், சின்ன சின்ன ஆசைகள் இருந்தும் அளவாய் வாழ யோசிக்கின்ற நல்ல உறவுக்ளை கொடுத்திதிருக்கிறார் என கூறினார்.

      இந்த நண்பர் காலப்போக்கில் தான் அடைந்திருந்த மாற்றத்தை உணர்ந்து கன்னத்தில் அறைந்தார் போல அதிர்ச்சியில் நின்றிருக்க, அதையெல்லாம் விடுடா என தனது பழங்க்கால சுவாரசியமான நிகழ்வுகளுக்கு கொண்டு சென்றாராம்.

      எது புரிந்ததோ இல்லையோ எனது நண்பருக்கு ஒன்று மட்டும் தெளிவாக தெரிந்ததாம், நாம் எல்லோரும் விரும்புகின்ற இந்த சந்தோசம் எதனுடனும் ஓட்டியிருக்கவில்லை அது நம் எண்ணங்களின் அலைவரிசையில் இருக்கிறது அதில் நாம் ஏற்படுத்துகின்ற ஒழுக்கத்தில் இருக்கிறது. இது மட்டும் ஒழுங்குபடுத்தப் பட்டால் உலகத்தில் ஏற்றத்தாழ்வு என்ற வரம்பினை ஏற்ப்படுத்தும் ஊன்கள்  கூட யோசிக்கும் என்பது தின்னம்...

Monday, 19 August 2013

ஏதார்த்தமும் எளிமையும்

        ஒரு நாள்; ஓர் அலுவலகத்தில் சிறப்பு விருது வழங்கும் விழா மேடையில் சில வெற்றியாலர்கள் குழுமியிருக்க அங்கே, வந்தவர்களிடம் விழாவின்  தலைவர் அவர்கள் ஒரே கேள்வியினை பலரிடமும் கேட்டார். உங்கள் வெற்றிக்கு வழி காட்டி யார் என்று.

      அதற்கு பலரும் தங்கள் துறையில் தலை சிறந்த தலைவர்களையும் மேதைகளையும் அடிக்கிக் கொண்டு, அவர்களது புகழ் பாடிக் கொண்டிருக்கையில். அம்மையார் ஒருவர் சொன்னார்.

     எனது அன்றாட வாழ்வினில் நான் கண்டு உள்வாங்கிக் கொண்ட எனது தந்தையார் செயல் தொடங்கி என் அன்றாட வாழ்வில் நான் உயர்வாய் நினைக்கின்ற ஒவ்வொரு ஜிவனும், காயத்தால் என்னை கடினப்படுத்திய எனது தோல்விகள், வெற்றியின் வீரியத்தில் அறிந்து கொள்ளா பாதை வழி.

      இப்படி  எத்தனை எத்தனையோ ஊக்கங்களும் அதில் ஒளிந்திருந்த உற்ச்சாகமும்,  எனக்கு வழி காட்டியது என்றார். அதற்கு அங்கிருந்தவர்கள் சிரித்ததுக் கொண்டு அப்புறம் எப்படி அம்மையார் இந்த துறையில் சாதிக்க முடிந்ததாம் என்றார்கள் கிண்டலும் கேலியுடன்.

      அதற்கு அவர் ஆமாம் நான் எனது துறையில் சிறந்து விளங்கிய தலைவர்களின் புத்தகங்களை படித்திருக்கிறேன் அவைகள் என்னை பக்குவ படுத்தியிருக்கின்றன. ஆனால் தண்ணீரும் கல்லும் சேர்த்து சுடுகின்ற கலவையாய் உருவாக்க முடியுமா என கேட்டாள்?

     என் தந்தையார் எனது வீட்டிற்கு  சுண்ணாம்பு அடிக்க கிளிஞ்சல்களை தண்ணீருடன் கலக்கிய கலவைதான், என் கண் முன்னே தோன்றும் அதுதான் நான் முடிவெடுக்க வழிகோலும். இந்த உள்ளுணர்வுகள் நான் விரும்பி ஏற்றுக் கொண்ட மாற்றங்கள் (ம) தடுமாறிய தருணங்களில் வந்த தாக்கங்கள், என வாழ்வின் ஒவ்வொரு நொடிப் பொழுதிலும் நான் அறிந்து கொண்ட எளிமையும் எதார்த்தமும்தான்  என்னை வழி நடத்தியது என நம்புகிறேன் என்றார்.

     அங்கிருந்த கூட்டத்தின் சல சலப்பு நின்று போனது,  நடுவர் வாயசைக்க தொடங்கினார் இங்கிருக்கின்ற நிறைய வெற்றியாளர்கள், நிறைவான காரணங்களைச் சொன்னாலும்.  எளிமை என்கின்ற எதார்த்தத்தின் அழகும் அது தருகின்ற ஆழ்மன  நிம்மதியின் மகத்துவமும் நிச்சயம்; நாம் எல்லாரும் விரும்புகின்ற விருட்சம்தான் என முடிக்கின்றார் புன்னகையுடன்.

Sunday, 11 August 2013

உள் மன அமைதியின் மகத்துவம்

       ஒரு ஊரில் மன அமைதியுடன் நிம்மதியாக வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர், செய்வதறியாது தடு மாறிக் கொண்டிருந்தார் எல்லோரும் தன்னை எதிர்ப்பதாகவும், என்னால் ஏன் மற்றவர்களுடன் ஒத்து போக முடிவதில்லை. இயல்பாகவே எனது நடத்தையில் ஏதேனும் மாற்றம் தேவையா என்ற சிந்தனை, என பல்வேறு வகையான எண்ணங்களில் மன உலைச்சலுக்கு ஆலாகியிருந்தார்.

      இந்த மனப் போராட்டத்தில் வாழ்வின் சந்தோச நிமிடங்கள் குறைவதாக மட்டும் உணர்ந்திருக்கையில்,  பலரிடம் கேட்டும் பலனில்லாமல் பாதை நகர்ந்து கொண்டிருக்கையில்.

      ஒரு நாள் ஒரு முதியவரை ஏதார்ச்சியா தான் பயணம் செய்த பேருந்தில் பார்க்கிறார். அன்று அவருக்கு தெரிந்திருக்காது அது அவர் வாழ்வின் பாதையை மற்ற வந்த முக்கிய மூன்று மணித்துளிகள் என்று.

      அப்பொழுது அவர்கள் பேசிக் கொண்டிருக்கையில், இவர் தனது மன உலைச்சலைப் பற்றி சொல்ல அந்த பெரியவர் சிரித்ததுவிட்டு கூறினார்.
தம்பி நம் உடல் உருவாக்கும் நிழலை விட குறைந்த தொலைவில் நம்முடனே இணைந்திருக்கும் நம் உடலும் மனமும் சில நேரத்தில் நாம் சொல்வதைக் கேட்பதில்லை.

      நீ வெளியில் இருக்கின்ற, என்ன நோக்கத்துடன் படைக்கப்பட்டதென்று தெறியாத ஒன்று என்னை எதிர்க்கிறது, நான் சொல்வதை கேட்பதில்லை என நினைத்து வருத்தப்படுகின்றாய். ஒன்றினை மட்டும் நினவில் வைத்துக்கொள் உனக்கு சாதகமான சூழலினை உனக்குள் மட்டும்தான் உருவாக்க முடியும் அது வெளியுலகில் தேடி கிடைப்பதில்லை.

      மற்றவர்களை உனக்கு சாதகமானவர்காளாக மாற்ற நினைக்காதே உந்தன் எண்ணங்களின் அலைவரிசையில் படைக்கப்பட்ட ஜீவன்கள் வாழுகின்ற சூழலில், உனக்குள் சின்ன சின்ன மாற்றங்களை உருவாக்கி  அதில் உன்னை வழி நடத்தக் கற்றுக்கொள், அதுவே உனக்கு சந்தோசாமாக வாழுகின்ற சூழலினைக் கொடுக்கும் என்றார்.

      இந்த மனிதர் தான் செய்து கொண்டிருந்த தவறினை உணர்ந்து, தன் உள் மன சூழலினை சரி செய்கின்ற செயலினை [Inner Engineering]
தொடங்கி. இன்று சந்தோசாமான வாழ்வினை வாழ்த்து கொண்டிருக்கிறார்.

      நாம் கற்றுக் கொண்ட பின் வாழத்தொடங்கவில்லை தவறுதல்
நடக்காமல் இருப்பதற்க்கு, நீங்கள் உங்களுக்குள் எற்படுத்துகின்ற மாற்றங்கள் உங்களுக்கு மன நிம்மதியினையும் சந்தோசாத்தையும் கொடுப்பதாக இருக்கட்டும்.